×

தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று ஆறுதல்!

தேனி: தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிஐஜி விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது தற்கொலை குறித்து கருத்து தெரிவித்த சங்கர் ஜிவால், கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகவும் வருந்தத்தக்கது. கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்து விஜயகுமாருக்கு ஐ.ஜி. சுதாகர் நேற்று முன்தினம் கவுன்சிலிங் அளித்துள்ளார்.

அவர் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு அலுவல் பிரச்சனை காரணம் இல்லை. இது குறித்து ஐ.ஜி. சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட கோவை சரக் டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். தேனி அணைக்கரப்பட்டியில் உள்ள டி.ஐ.ஜி. விஜயகுமாரின் வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்றுள்ளார். அங்கு விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

The post தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று ஆறுதல்! appeared first on Dinakaran.

Tags : Minister ,I.G. ,Govai Saraka ,DIG ,Vijayakumar ,Periyasamy ,Minister of State ,Govai ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி